எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான புழுதிபட்டி, செட்டிகுறிச்சி, குன்னத்தூர், கே.புதுப்பட்டி பகுதிகளில் நேற்று லேசான சூறை காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்்ச்சி அடைந்தனர். தற்போது நிலவி வரும் கோடை வெப்பத்ைத தணிக்கும் விதமாக இந்த மழை அமைந்திருந்தது. இதே போல சிங்கம்புணரி பகுதியில் நேற்று பகல் 2 மணி அளவில் பரவலாக மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.