விவசாயி விஷம் குடித்து தற்கொலை

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-05-01 18:23 GMT
தரகம்பட்டி
தரகம்பட்டி அருகே உள்ள தேவர்மலை கிராமம் சீத்தபட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 50). விவசாயி. இவருக்கு பல நாட்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதனால் மருத்துவமனைகளில் காண்பித்தும் வயிற்று வலி சரியாகவில்லையாம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட கருப்பசாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குருணை மருந்தை (விஷம்) தின்று மயங்கி விழுந்தார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி கருப்பசாமி பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை குறித்து சிந்தாமணிபட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்