கரூரில் மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று

கரூரில் மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-05-01 18:24 GMT
கரூர்
தமிழகத்தில் கொரோனோ தொற்றின் 2-வது அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் கரூர் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி கரூர் மாவட்டத்தில் புதிதாக 175 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 164 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மாவட்டத்தில் 997 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மேலும் செய்திகள்