வாலிபர் திடீரென சாவு

வாலிபர் திடீரென இறந்தார்.

Update: 2021-05-01 18:45 GMT
கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மணவாசியை சேர்ந்தவர் மாணிக்கம்(வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்தநிலையில் சம்பவத்தன்று மாணிக்கம் வீட்டில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மாணிக்கத்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்