4 வயது ஆண் குழந்தைக்கு பாலியல் தொல்லை
4 வயது ஆண் குழந்தைக்கு பாலியல் தொல்லை
கோவை
பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 52). தொழிலாளி. இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர், அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த 4 வயது ஆண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.
இதை கண்ட அந்த குழந்தையின் தாய் சத்தம் போட்டார். உடனே மணி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து குழந்தையின் தாய் அளித்த புகாரின் பேரில் பேரூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மணியை வலைவீசி தேடி வருகின்றனர்.