தலைவாசல் அருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்றவர் பிடிபட்டார் மொபட் பறிமுதல்

தலைவாசல் அருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்றவர் பிடிபட்டார். மேலும் அவரிடமிருந்த மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-05-01 19:58 GMT
தலைவாசல்:
ஆத்தூர் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், அண்ணாமலை ஆகியோர் தலைவாசல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். தலைவாசல் அருகே நத்தக்கரை ஏரிக்கரை அருகில் மொபட்டில் சுற்றிக்கொண்டிருந்த வாலிபரை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்தனர். 
அப்போது அவரது மொபட்டில் இருந்த 106 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் தலைவாசல் அருகே நத்தக்கரை கிராமத்தை சேர்ந்த பரந்தாமன் (வயது 45) என்பதும், அவர் மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக ஆத்தூர் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி வழக்குப்பதிவு செய்து பரந்தாமனை கைது செய்தார். அவரிடமிருந்து 106 மதுபாட்டில்கள், மொபட் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்