மது கடத்திய வாலிபர் கைது

புளியங்குடியில் மதுபாட்டில்களை கடத்திச் சென்றதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-05-01 20:27 GMT
புளியங்குடி, மே:
புளியங்குடி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் சென்ற கீழபுதூரை சேர்ந்த கார்த்திக் (வயது 24) என்ற வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் 85 மதுபாட்டில்களை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கார்த்திக்கை கைது செய்து அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்