விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

நெல்லையில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-05-02 22:43 GMT
நெல்லை, மே:
நெல்லை பழையபேட்டை புது கிராமத்தைச் சேர்ந்தவர் தனராஜ் (வயது 27). இவரது தங்கைக்கு நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட தனராஜ் சம்பவத்தன்று நெல்லை கொக்கிரகுளம் ஆற்றுப்பாலம் பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி தனராஜ் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்