ஏற்காடு தொகுதியில் 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை திறக்க முடியாததால் பரபரப்பு
2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை திறக்க முடியாததால் பரபரப்பு
சேலம்:
சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் நேற்று அம்மாபேட்டை கணேஷ் கலை அறிவியல் கல்லூரியில் எண்ணப்பட்டன. அப்போது 291 மற்றும் 294 ஆகிய வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை திறக்க முடியவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக வாக்கு எண்ணும் பணி தாமதமானது. தொடர்ந்து அதிகாரிகள் சரி செய்ய முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதைத்தொடர்ந்து வி.வி.பேட் எந்திரத்தில் பதிவாகி இருந்த வாக்குகள் மூலம் ஓட்டுகள் எண்ணப்பட்டன.