வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

Update: 2021-05-03 15:29 GMT
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. 

இந்த நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் மாவட்டம் முழுவதும் 217 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். 

மேலும் செய்திகள்