திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இதன் காரணமாக நுங்கு, இளநீர், பழச்சாறு மற்றும் குளிர்பான விற்பனை அதிகரித்துள்ளது.
அதிலும் குறிப்பாக உடலுக்கு குளிர்ச்சியும், சக்தியும் அளிக்கும் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.
திண்டுக்கல் நகரின் முக்கிய சாலையோரங்களில் நுங்குகளை குவியலாக வைத்து ஏராளமானோர் விற்பனை செய்து வருகின்றனர்.
அவற்றை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.
ஒரு நுங்கில் 3 கண்கள் வரை இருக்கும். 2 நுங்குகள் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.