தர்மபுரியில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தர்மபுரியில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை.
தர்மபுரி,
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 72). இவர் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருடைய குடும்பத்தினர் தர்மபுரியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் வீட்டில் உள்ள ஒரு அறையில் ரங்கநாதன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அவர் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.