மதுபாட்டில்கள் விற்றவர் கைது

மதுபாட்டில்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்

Update: 2021-05-03 19:21 GMT
ஆர்.எஸ்.மங்கலம்
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா களக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் பாலமுருகன்(வயது 30). இவர் அனுமதி இல்லாமல் இந்திரா நகர் டாஸ்மாக் கடை அருகில் மதுபாட்டில்கள் விற்று வருவதாக ஆர்.எஸ்.மங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி சம்பவ இடத்தை ஆய்வு செய்தபோது விற்பனைக்காக 72 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்து தெரியவந்தது. இதையடுத்து பாலமுருகனை கைது செய்து மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்