காரமடையில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

காரமடையில் பெண்ணிடம் 5 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

Update: 2021-05-03 20:49 GMT
காரமடை

காரமடை அருகே உள்ள மங்களக்கரைபுதூர் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் சின்னராஜ். இவரது மனைவி புஷ்பராணி (வயது 51). அவர் அந்தப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். 

இந்த நிலையில் நேற்று மளிகை கடைக்கு இருசக்கர வாகனத்தில் 2 பேர் வந்தனர். அவர்கள் புஷ்பராணியிடம் குளிர்பானம் கேட்டனர். அத்துடன் அதற்காக சில தின்பண்டங்களும் கேட்டனர். 

அவற்றை அவர் எடுப்பதற்காக கீழே குனிந்தார். அந்த நேரத்தில் அந்த 2 பேரும் புஷ்பராணி கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துவிட்டு தப்பிச்சென்றனர்.  

இது குறித்த புகாரின்பேரில் காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம ஆசாமிகள் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்