காவலாளி வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை

காவலாளி வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை சேதப்படுத்தியது

Update: 2021-05-04 14:28 GMT
கூடலூர்

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தொரப்பள்ளி அருகே அள்ளூர்வயல் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். இவர் தனியார் தோட்ட காவலாளியாக பணியாற்றி வருகிறார்.  வழக்கம்போல பணிக்குச் சென்றார். வீட்டில் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இருந்தனர். 

நள்ளிரவு அப்பகுதிக்கு ஒரு காட்டு யானை வந்தது.அந்த காட்டு யானை வாசுதேவன் வீட்டை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் வீட்டில் இருந்த வாசுதேவன் குடும்பத்தினரின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். 

பின்னர் அவர்கள் அந்த காட்டு யானையை துரத்தினார்கள். 
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். 

அப்போது அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள், காட்டு யானைகள் தொந்தரவு அதிகமாக உள்ளதால் அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

மேலும் செய்திகள்