மதுரை,மே.
மதுரை செல்லூர் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது குலமங்கலம் மெயின் ரோடு பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் ஒருவர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அவரை பிடித்து விசாரித்த போது பனாங்காடி பகுதியை சேர்ந்த பாண்டிதுரை (வயது 40) என்பதும். அவர் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.