புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று

மாவட்டத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-05-04 16:45 GMT
புதுக்கோட்டை, மே.5-
மாவட்டத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனா தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 232 ஆக அதிகரித்தது.  கொரோனா சிகிச்சையில் இருந்து 96 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து235 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 834 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 163 ஆக உள்ளது.
அரிமளம்
இதில் அரிமளம் ஒன்றியம் கீழப்பனையூர் அருகே உள்ள வையாபுரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த 21 வயது ஆண், ஏம்பல் புது வீதி பகுதியை சேர்ந்த 32 வயது ஆண், கே.புதுப்பட்டி 25 வயது போலீஸ்காரர் ஆகியோருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக தனியார் மற்றும் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

மேலும் செய்திகள்