தடையை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்கு

எஸ்.புதூர் அருகே தடையை மீறி பட்டாசு வெடித்ததாக தி.மு.க.வினர் மீது வழக்கு போடப்பட்டு உள்ளது.

Update: 2021-05-04 17:54 GMT
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே கட்டுகுடிபட்டி பகுதியில் சம்பவத்தன்று உலகம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திருவாழ்ந்தூர் கிராத்தைச் சேர்ந்த மாதவன், கட்டுகுடிபட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் சிலர் தி.மு.க கட்சியின் வெற்றியை கொண்டாடும் வகையில் தடையை மீறி பட்டாசு வெடித்துள்ளனர். அதனை தொடர்ந்து மாதவன், செந்தில்குமார் மற்றும் சிலர் மீது உலகம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்