மது விற்ற 22 பேர் கைது
நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி மாவட்டத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 22 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 193 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.