நெல்லையில் 719 பேருக்கு கொரோனா

நெல்லையில் 719 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

Update: 2021-05-04 19:49 GMT
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 719 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 129 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 22ஆயிரத்து 503 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்றும் 987 பேர் குணமடைந்து உள்ளனர். 4 ஆயிரத்து 378 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
நெல்லையில் 54 வயது முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியானார்.

மேலும் செய்திகள்