கணவரின் மது பழக்கத்தால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2021-05-04 22:42 GMT
கன்னங்குறிச்சி:
சேலம் ஜட்ஜ்ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். பரோட்டா மாஸ்டர். இவருடைய மனைவி சத்யா (வயது 33). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். பிரபாகரன் தினமும் மதுகுடித்து விட்டு வந்ததால் சத்யா கோபித்துக்கொண்டு, தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கணவர் வீட்டுக்கு வந்துள்ளார். ஆனாலும் பிரபாகரன் மதுகுடிக்கும் பழக்கத்தை விடவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் பிரபாகரன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த சத்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்