சேலம்:
சேலம் செரி ரோட்டில் உள்ள எல்லைப்பிடாரி அம்மன் கோவிலில் கடந்த ஆண்டு உண்டியல் உடைக்கப்பட்டு திருட்டு போனது. இதுதொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இந்த திருட்டு தொடர்பாக கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்தனர்.