பெரணமல்லூர்; வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

பெரணமல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

Update: 2021-05-05 13:09 GMT
சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரை அடுத்த சோழவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்கொடி (வயது 37). இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி விட்டு 100 நாள் வேலைக்கு கிராமம் அருகே சென்று விட்டார்.

மாலை திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டுக்கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயித்தை காணவில்லை. மர்மநபர்கள் யாரோ திருடிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து அவர், பெரணமல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கோமளவல்லி வழக்குப்பதிவு செய்து, பூங்கொடியின் வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

திருட்டில் ஈடுபட்ட மர்மநபரை வலை வீசி தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்