தி.மு.க. சார்பில் நிதி உதவி

நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண்ணுக்கு தி.மு.க. சார்பில் நிதி உதவி

Update: 2021-05-05 18:01 GMT
பரமக்குடி
பரமக்குடி ஒன்றியம் பொதுவக்குடி கிராமத்தை சேர்ந்த தி.மு.க. தொண்டர் கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா(வயது 32). இவர், தி.மு.க. தேர்தலில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சரானால் நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக முத்தாலம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் வைத்துள்ளார். அதன்படி மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் பதவி ஏற்க இருப்பதால் கோவில் முன்பு அவரது நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார். அதையொட்டி பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வனிதாவிற்கு தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பின்பு தி.மு.க. முன்னாள் எம்.பி. விஜயன் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று வனிதாவிற்கு ஆறுதல் கூறி ரூ.10 ஆயிரம் நிதி உதவியும் வழங்கினார். பரமக்குடி நகர் தி.மு.க. செயலாளர் சேது கருணாநிதி, ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகி துரைமுருகன், மள்ளர் இலக்கிய கழகம் மாநில பொதுச் செயலாளர் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்