தொழிலாளி தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு அருகே தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-05-05 19:49 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு அருகே உள்ள ஊரல்பட்டியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 40). கூலித்தொழிலாளி. 

இவரது மனைவி தனலட்சுமி (35). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். வீட்டில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் மனமுடைந்த சிவகுமார் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். 

உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி சிவக்குமார் இறந்தார். 


இதுகுறித்து தாண்டிக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்