ஓட்டல் உரிமையாளர் தற்கொலை

பாளையங்கோட்டையில் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-05-05 20:19 GMT
நெல்லை:

பாளையங்கோட்டை ரகுமத் நகரை சேர்ந்தவர் பக்ருதீன் (வயது 48). இவர் அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட பக்ருதீன் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்