செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,755 பேர் பாதிப்பு 16 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,755 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். 16 பேர் பலியானார்கள்.

Update: 2021-05-06 01:31 GMT
வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,755 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 88 ஆயிரத்து 192 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 76 ஆயிரத்து 849 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 997 ஆக உயர்ந்தது. இதில் 10 ஆயிரத்து 346 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 541 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆயிரத்து 805 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 37 ஆயிரத்து 141 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்தனர்.

இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது. 3,088 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்