வாலிபருக்கு அரிவாள் வெட்டு

பாளையங்கோட்டை அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2021-05-07 18:59 GMT
நெல்லை:

பாளையங்கோட்டை அருகே உள்ள தெற்கு அரியகுளத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கும், உறவினரான அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான மற்றொரு மாரியப்பனுக்கும் (வயது 45) இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த மற்றொரு மாரியப்பன் அரிவாளால் மாரியப்பனின் மகன் அருள் பிரகாஷை (22) வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்