கடைகளுக்கு ரூ.72 ஆயிரம் அபராதம்

கடைகளுக்கு ரூ.72 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-05-08 19:51 GMT
நெல்லை:

நெல்லையில் மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவின்பேரில், பல்வேறு இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறி, பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் லேப் வசதி கொண்ட ஸ்டூடியோ செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஸ்டூடியோவுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல் நெல்லை மாநகரம் முழுவதும் விதிகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு மொத்தம் ரூ.72 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்