மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது

மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-05-09 16:11 GMT
நயினார்கோவில், 
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியன் பாண்டியூர் கிராமத்தை சேர்ந்த முனியசாமி மகன் சதீஷ்குமார் (வயது 33). இவர் சட்ட விரோத மாக தன்னுடைய உறவினர் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து இருந்ததாக நயினார்கோவில் போலீஸ் நிலையத்திற்கு புகார் வந்தது. 
இதனை அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் சோதனை செய்யும்போது 720 மது பாட்டில்களை பதுக்கி வைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கொேரானா பரிசோதனை செய்து முதுகுளத்தூர் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்