மதுவிற்ற 105 பேர் கைது

மதுவிற்ற 105 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-05-09 16:33 GMT
ராமநாதபுரம், 
தமிழகத்தில் 14 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பித்து மதுக்கடைகள் அடைக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்காரணமாக மதுவிற்பனை செய்ய வியாபாரிகள் ஏராளமாக மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்துள்ளனர். இதுபற்றி அறிந்த ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் மற்றும் அந்த பகுதி போலீசார் தீவிர சோதனை யில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் மதுவிற்பனை செய்த 105 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 4 ஆயிரத்து 355 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல, மாவட்டம் முழவதும் போலீசார் நடத்திய சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்