சிறுமி பாலியல் பலாத்காரம்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-05-09 19:33 GMT
விருத்தாசலம், 
விருத்தாசலம் அருகே கிளிமங்கலத்தைச் சேர்ந்தவர் பட்டுசாமி மகன் ஜோதிவேல் (வயது 30). இவர் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 6 வயதுடைய சிறுமியை கடத்தி சென்று கரும்பு தோட்டத்தில் வைத்து  பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜோதிவேலை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்