மாளிகைமேட்டில் அகழ்வாராய்ச்சி பணிகள் நிறுத்தம்
மாளிகைமேட்டில் அகழ்வாராய்ச்சி பணிகள் நிறுத்தப்பட்டது.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் அருகே உள்ள மாளிகைமேடு பகுதியில் முதற்கட்ட ஆய்வு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டு தொல்லியல்துறையினர் அகழாய்வு பணிகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு காரணமாக மாளிகைமேட்டில் நடைபெற்றுவரும் அகழாய்வு பணிகள் ஊரடங்கு காலம் முடிந்து மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அகழாய்வு பணிகள் நடைபெறும் மாளிகைமேடு பகுதியானது வெறிச்சோடி காணப்படுகிறது.