முதியவரின் உயிரை பறித்த கொரோனா

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் ஒருவர் பலியாகினார்.

Update: 2021-05-10 15:44 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த 63 வயது முதியவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது.

 இதையடுத்து அவர், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் இறந்தார்.
இதன் மூலம் மொத்த இறப்பு எண்ணிக்கை 236 ஆனது. 

இதற்கிடையே நேற்று போலீஸ்காரர், 108 பெண்கள் உள்பட மேலும் 340 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 

அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 

அதேநேரம் 229 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

 இதன்மூலம் மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 599 ஆக உயர்ந்தது. 

நேற்றைய நிலவரப்படி 1,888 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்