தொழில் அதிபர் அலுவலகத்தில் ரூ.70 ஆயிரம் திருட்டு

தொழில் அதிபர் அலுவலகத்தில் ரூ.70 ஆயிரம் திருட்டு

Update: 2021-05-10 15:59 GMT
தொழில் அதிபர் அலுவலகத்தில் ரூ.70 ஆயிரம் திருட்டு
கோவை

கோவையை அடுத்த துடியலூர் ஸ்ரீவஸ்தா கார்டனை சேர்ந்தவர் ராஜா (வயது 51). தொழில் அதிபர். இவர் பீளமேடு திருமுருகன் நகரில் கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் அலுவலகம் நடத்தி வருகிறார். 

இவர், கடந்த 8-ந் தேதி வேலை முடிந்ததும் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. 

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பெட்டியில் வைத்து இருந்த ரூ.70 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. 

இதுகுறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்