லேப்டாப், செல்போன்கள் பொருட்கள் திருட்டு

லேப்டாப், செல்போன்கள் பொருட்கள் திருட்டு

Update: 2021-05-10 19:46 GMT
மதுரை
மதுரை வண்டியூர் சுந்தர் நகரை சேர்ந்தவர் சதீஸ்பாபு(வயது 35), தனியார் கம்பெனி உரிமையாளர். சம்பவத்தன்று இவர் கம்பெனியை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று மறுநாள் காலை வந்தார். அப்போது யாரோ மர்மநபர்கள் கம்பெனிக்குள் புகுந்து அங்கிருந்த மடிக்கணிணி, செல்போன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை திருடி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்