2 குட்டிகளுடன் உலா வந்த கரடி

2 குட்டிகளுடன் உலா வந்த கரடி.

Update: 2021-05-11 01:13 GMT
கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட அரவேனு அருகே அளக்கரை கிராமம் உள்ளது. இந்த கிராமம் அடர்ந்த வனப்பகுதிக்கு அருகில் இருக்கிறது. இதனால் இங்கு கரடி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே முடங்கினர். இதனால் சாலைகள் மற்றும் பொது இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதற்கிடையில் அங்கு மதியம் 2 குட்டிகளுடன் கரடி உலா வந்தது. சிறிது நேரம் அதே பகுதியில் சுற்றித்திரிந்த கரடிகள், அதன்பிறகு அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் சென்றது.

மேலும் செய்திகள்