3 பேர் கைது

4 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது

Update: 2021-05-11 12:27 GMT
திருப்பூர்
திருப்பூர் காலேஜ் ரோடு மாஸ்கோ நகர் பகுதியில் கஞ்சா வியாபாரம் நடப்பதாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து  வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் மாஸ்கோ நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் அவர்கள் மாஸ்கோ நகர் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த சுரேந்தர் வயது 26, நரசிம்ம பிரவீன் 24, யாசர் அராபத் 24 என்பதும், இவர்கள் சுமைதூக்கும் தொழிலாளர்கள் என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்