புதுக்கோட்டை மாவட்டத்தில் 176 பேருக்கு கொரோனா தொற்று

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-05-11 18:20 GMT
புதுக்கோட்டை, மே.12-
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 640 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 154 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 236 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 1,235 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 169 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்