கார் மோதி விவசாயி சாவு
வேடசந்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் விவசாயி பலியாகினார்.
திண்டுக்கல் :
கடந்த 6-ந்தேதி இவர், கூம்பூர்-வேடசந்தூர் சாலையில் வெள்ளையம்பட்டி பிரிவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சின்னச்சாமி படுகாயம் அடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சின்னச்சாமி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கூம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த கார் டிரைவர் சரவணன் (46) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.