ராமநாதபுரம்
ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்செல்வம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் அருகே காட்டூரணி பகுதியில் பணம் வைத்து சூதாடிய காட்டூரணி யாதவர் தெருவை சேர்ந்த விஜயகுமார் (வயது38), காளீஸ்வரன் (35), சங்கர்குமார் (38), வினோத் (28) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து சூதாட பயன்படுத்திய ரூ.ஆயிரத்து 620-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.