பட்டதாரி பெண் மாயம்

பட்டதாரி பெண் மாயம் ஆனார்.

Update: 2021-05-12 17:51 GMT
கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள கருப்பூரை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் வினோதினி (வயது 21). எம்.ஏ பட்டதாரியான இவர், கடந்த 9-ந்தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் திரும்பி வரவில்லை. இதையடுத்து வினோதினியின் பெற்றோர் அவரை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வினோதினியின் தாய் சரஸ்வதி கொடுத்த புகாரின்பேரில், மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்