தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை

கொடைக்கானல் அருகே விவசாயி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-05-13 15:03 GMT
கொடைக்கானல்: 

கொடைக்கானல் தாலுகா பூண்டி ஊராட்சியை சேர்ந்த போளூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 26). விவசாயி. 

இவரது மனைவி கோகிலா மணி. பாலமுருகன் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் மன்னவனூர்-கொடைக்கானல் சாலையில் உள்ள வனப்பகுதியில் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்