கோடையை குளிர்வித்த மழை

எஸ்.புதூர் பகுதியில் பெய்த மழை கோடையை குளிர்வித்தது.

Update: 2021-05-13 15:28 GMT
எஸ்.புதூர்,

அக்னி நட்சத்திர வெயில் கடந்த 4- ந்தேதி முதல் ஆரம்பமானது. இந்த நிலையில் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சற்று அதிகமாகவே காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான புழுதிபட்டி, செட்டிகுறிச்சி, குன்னத்தூர் பகுதிகளில் நேற்று மதியம் பரவலாக நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக அந்த பகுதியே குளிர்ந்து காணப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்