உண்டியலில் சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுமி
கொரோனா தடுப்பு பணிக்கு பொதுமக்கள் நிதி அளித்து உதவ வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
கோவை,
இந்த நிலையில், கோவை பீளமேடு காந்திமாநகரை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகள் பிரணவிகா (வயது 7) தான் உண்டியலில் பல மாதங்களாக சிறுக, சிறுக சேமித்து வைத்த ரூ.1,516-ஐ முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்தார். இதையடுத்து அவர், தனது தந்தையுடன் ஆர்.எஸ்.புரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சென்று முதல்-அமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு தான் சேமித்த பணத்தை அனுப்பினார். இதுகுறித்து பழனிச்சாமி கூறும்போது, பட்டு துணி வாங்குவதற்காக உண்டியலில் சேமித்த நாணயங்களை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க பிரணவிகா முடிவு செய்தார். அதன்படி அந்த பணத்தை அனுப்பினோம். இவ்வாறு அவர் கூறினார்.