மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்

Update: 2021-05-13 17:49 GMT
கமுதி
கமுதி காளியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பழனி(வயது 36). இவர் நேற்று குண்டாறு பகுதியில் இருந்து சரக்கு வாகனத்தில் மணல் அள்ளிக்கொண்டிருந்தார்.  அப்போது, அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார், மணல் அள்ளிக்கொண்டிருந்த பழனியை கைது செய்தனர். மேலும் சரக்கு வாகனத்தில் 100 மணல் மூடைகள் இருந்தது. இதைதொடர்ந்து சரக்கு வாகனத்தையும், மணல் மூடைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்