கொரோனாவுக்கு தூய்மை பணியாளர் பலி

கொரோனாவுக்கு தூய்மை பணியாளர் பரிதாபமாக இறந்தார்

Update: 2021-05-13 17:50 GMT
நயினார்கோவில்
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியன் பொட்டகவயல் கிராமத்தை சேர்ந்தவர் ராயப்பன். இவரது மனைவி மஞ்சுளா(வயது 52). இவர் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானதால் கடந்த 5 நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமைனயில் அவர் இறந்தார். மஞ்சுளா குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என பொட்டகவயல் கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்