நெல்லை:
பாளையங்கோட்டையை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகள் ஜானகி (வயது 23). இவர் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென அங்கு மயங்கி விழுந்தார்.
உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜானகி பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.