சிவகாசி,
சிவகாசி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் சரஸ்வதி பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த மாரீகாத்தீஸ்வரன் (வயது 42), ரமேஷ் (32), கருப்பையா (52), கோவிந்தராஜ் (45) ஆகியோர் காசு வைத்து சூதாடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்துரூ.600-யை பறிமுதல் செய்தனர்.