பெட்டிக்கடையில் மது விற்றவர் கைது

பெட்டிக்கடையில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்

Update: 2021-05-13 19:51 GMT
மணமேல்குடி
மணமேல்குடியை அடுத்த திருவப்பாடி கடைவீதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் துரையரசன் (வயது 35). இவரது பெட்டிக் கடையில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மணமேல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையில் போலீசார் அந்த பெட்டிக்கடைக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கடைக்கு பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் துரையரசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்